உலக கரலாக்கட்டை தினம்.. ஹரிஹரன் என்பவர் கெண்டைக்கால் சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் ஆயிரத்து 360 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்.!
புதுச்சேரியில் உலக கரலாக்கட்டை தினத்தை முன்னிட்டு கரலாக்கட்டை சுழற்றுவதில் உலக சாதனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பூரனாங்குப்பத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிலம்பாட்ட குருகுல நிறுவனர் ஜோதிசெந்தில்கண்ணன் என்பவர் உடும்பு சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் ஆயிரத்து 304 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்.
மும்பையைச் சேர்ந்த திரிஷா என்ற இளம்பெண் 30 நிமிடத்தில் ஆயிரத்து 082 முறை கரலாக்கட்டை சுற்றி உலக சாதனை படைத்தார்.
ஹரிஹரன் என்பவர் கெண்டைக்கால் சுற்று என்ற முறையில் 30 நிமிடத்தில் ஆயிரத்து 360 முறை சுற்றி உலக சாதனை படைத்தார்.
Comments